சி.டி.விக்ரமரத்னவுக்கு நான்காவது முறையாகவும் சேவை நீடிப்பு
புதிய இணைப்பு
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
3 வார காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இவ்வாறு நான்காவது முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சேவை நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, மூன்று மாதங்கள் என்ற அடிப்படையில் இரண்டு முறையும், மூன்று வாரங்கள் சேவை நீடிப்பு ஒரு முறையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.

தமிழர்களை வெட்டுவேன் என்ற அம்பிட்டிய தேரருக்கு பகிரங்க சவால்! முடிந்தால் நாடாளுமன்ற மைதானத்திற்கு வரவும்
சேவை நீடிப்பு
இறுதியாக வழங்கப்பட்ட மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் (02.11.2023) முடிவடைந்த நிலையிலேயே ஜனாதிபதி இவருக்கு மீண்டும் சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் இவ்வாறு சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
