மக்கள் வாழிடங்களில் இருந்து அகற்றும் திண்மக்கழிவுகளை அகற்ற நிதி வசூலிப்பு (Photos)

People Tax Valikamam Fertilizer
By Independent Writer Jan 25, 2022 03:49 PM GMT
Report

மக்கள் தாம் வாழும் இடங்களிலிருந்து அகற்றும் திண்மக் கழிவுகளை குறித்தொதுக்கப்பட்ட ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதற்காக வாழும் மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபை அவ்வாறு குறித்த நிதியை மக்கள் வழங்கத் தவறும் பட்சத்தில் அதற்கான தண்டப்பணமும் அறவீடு செய்யப்படும் எனவும் தீர்மானித்துள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் நடனெந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இதில் குறித்த திண்மக்கழிவு தொடர்பான விவகாரம் சபையில் விவாதிக்கப்பட்ட போதே இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் துவாரகா ஜெயகாந்தன் கூறுகையில்,

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளில் மக்களால் வெளியேற்றப்படும் திண்மக் கழிவுகளைப் பிரதேச சபை மூலம் அகற்றுவது தொடர்பில் ஒரு பொறிமுறை உருவாக்குவது அவசியமாகும்.

அதனூடாக பிரதேசத்தின் வீதிகள் தோறும் வீசப்படும் கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை ஓரளவேனும் எட்டமுடியும். அந்தவகையில் சோலைவரி போன்ற வரிகளைச் சபையால் அறவிடுவது போன்று ஒரு பொறிமுறையை நடைமுறைப்படுத்தி இதை நடைமுறைச் சாத்தியமாக்கலாம் சபைக்கு வருமான மீட்டல் கிடைப்பதுடன், சேதனப்பசளை உருவாக்கலை முன்னெடுக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் குறித்த இலக்கை எட்ட மாதாந்தம் அல்லது காலாண்டுக்கு ஒரு தடவை குறித்த ஒரு நிதியைத் தீர்மானித்து அதனை அதிகாரிகளைக் கொண்டு அறவிடுவது சிறந்ததென்றும் பிரதேசத்தின் சுகாதார கட்டமைப்பும் சிறப்பாகப் பராமரிக்க முடியும் என்று குறித்த கட்சியின் மற்றொரு உறுப்பினரான சிவகுரு பாலகிருஸ்ணன் வலியுறுத்தியிருந்தார்.

இதேவேளை குறித்த நடைமுறை இறுக்கமாக் கொண்டுவரப்பட்டால் தான் சுகாதாரத்தைச் சீராகக் கொண்டுவர முடியும். என்றும் அதேநேரம் பணம் அறவிட்டால் இரு தரப்பினரிடையேயும் அது தொடர்பான அக்கறை ஏற்படும் என்றும் சபையின் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பொது அமைப்புகள் மற்றும் ஆலயங்களில் பெண்களுக்கும் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இடம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் துவாரகா ஜெயகாந்தன் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.

அத்துடன் இவ்வாறான ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதினூடாக பெண்களுக்கும் தமது ஆற்றல்களையும் வகிபாகத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

குறித்த பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை ஆதரித்து அனைத்து கட்சியினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்ணன் கூறுகையில்,

இது குறித்த பிரதேசத்தில் அவசியமாகக் கொண்டுவரப்பட வேண்டிய வரையறைகளுள் ஒன்று. இதனூடாக பெண்கள் ஆண்கள் என்ற பேதங்களின்றி பிரதேசத்தில் பல விடயங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க வாய்ப்பு உருவாக்கப்படும்.

கடந்த காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 வீத வகிபாகம் கொடுக்கப்பட்டதால் இன்று சபைகளில் குறிப்பாகப் பிரதேச அரசியலில் பெண்களின் வகிபாகம் உயர்ந்துள்ளது.

அதனூடாக பல சிறப்பான மாற்றங்களும் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது ஆகவே இவ்வாறான சட்டத்தை எமது பிரதேசத்தையும் தாண்டி நாடு முழுவதும் நடைமுறையாவதற்கு சட்டவாக்கம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு தத்தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் கட்சிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளியாது செயற்படுபவர்களாகவும் செயற்படுவதே பிரதேசத்திற்கும் மக்களுக்கும் சிறந்ததாக அமையும் எனவும் சபையில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை முன்னிறுத்திக் குறித்த சபையின் உறுப்பினர்களை மையப்படுத்தி நேற்றைய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் குறித்த பத்திரிகையிடம் விளக்கம் அல்லது தெளிவான செய்தியைப் பிரசுரித்தலைச் சபை கோரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

GalleryGallery
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US