இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பாரிய நிதி வழங்கவுள்ள ஜப்பான்
இலங்கையில் ஜப்பானின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அது மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. இதற்கென $1.6 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி கிடைத்த பின்னர் ஜப்பானின் செயற்றிட்ட நடவடிக்கைகளுக்கான நிதி பகிர்ந்தளிக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜெய்க்கா உட்பட இடைநிறுத்தப்பட்ட திட்ட வேலைகளுக்கான கடன்களை மீண்டும் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேச்சு வார்த்தை
இது குறித்து டோக்கியோவில் உள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் ஊடகப் இன் செய்தித் தொடர்பாளர் சர்வதேச நாணய நிதியம் முடிவுகளின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் $2.9 பில்லியன் பிணை எடுப்புக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வாக்களிக்க உள்ளது.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட மற்ற கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவி பெறவும் இந்த ஒப்புதல் வழி வகுக்கும்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு பிந்தைய நிதியுதவிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கியுடன் இலங்கை பேச்சு வார்த்தையில் உள்ளது.
May you like this Video

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
