அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்: ரோகன ஹெட்டியாராச்சி

Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Government
By Kumar Feb 12, 2023 01:00 PM GMT
Report

மக்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற இந்த அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் தங்களது கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (11.02.2023) மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்: ரோகன ஹெட்டியாராச்சி | Funded Elections Should Be Held

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் எதிர்கொள்ளவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் கடமையாற்றவுள்ள எமது குழுவினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தோம். அதே போன்று அம்பாறை மாவட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்படும் போது, நாங்கள் எவ்வாறான வகையில் கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம்.

விசேடமாக, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள தபால் மூலம் வாக்களிப்பு தொடர்பான கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுவவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

அதே போன்று தேர்தல் தினத்தில், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களில் எமது கடமைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் எமக்கு தெரியும்.

தேர்தல் திணைக்களம் தற்போது தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து விடயங்களயும் முன்னெடுத்து வருகின்றது. ஆனாலும் அதை நடத்துவதற்கு போதுமான நிதியை நிதியமைச்சு இன்னமும் ஒதுக்கி கொடுக்கவில்லை.

அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்: ரோகன ஹெட்டியாராச்சி | Funded Elections Should Be Held

300 மில்லியன் பணம்

தேர்தல் என்பது இந்த நாட்டின் பிரஜைகளின் உரிமை என்பதால் அந்த உரிமையை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென நாங்கள் இந்த வேளையில் வேண்டுகோளை நிதியமைச்சிற்கும் அதனுடைய செயலாளருக்கும் விடுக்கின்றோம்.

அத்தோடு, தேர்தல் திணைக்களம் கோரியுள்ள 300 மில்லியன் பணத்தினை எதிர்வரும் இரண்டு தினங்களிற்குள் வழங்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறு நிதியமைச்சிற்கும் அதனுடைய செயலாளருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அவ்வாறாக தேர்தலை நடாத்துவதற்கான நிதியினை வழங்கும் பட்சத்திலேயே தேர்தல் திணைக்களத்தினால் சுதந்திரமான தொரு தேர்தலை நடாத்த முடியுமாக இருக்குமென நம்புகின்றோம்.

இந்த வேளையில், சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதனை நடத்துவதற்காக பணத்தினை இன்னும் அரசாங்கம் ஒதுக்குவதில் தாமதமாகவே இருந்து வருகின்றது.

அரசியலமைப்பின்படி சுதந்திரமானதொரு தேர்தலை நடத்துவதற்கு நிதியினை பெற்றுக்கொடுக்கும் வேளையிலேயே அதனை நடத்தி முடிக்க முடியும். நிதியை காரணம் காட்டி மக்களின் உரிமையை மறுக்க முடியாது. தேர்தலை நடாத்துவதற்கான பணத்தை இந்த அரசினால் வழங்க முடியாதெனில் இந்த அரசு தோல்வியடைந்த அரசு எனவே கருத வேண்டியேற்படும்.

அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்: ரோகன ஹெட்டியாராச்சி | Funded Elections Should Be Held

ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

நிதியமைச்சின் செயலாளர் மறுப்பாராயின் அவரும் அரசியலமைப்பை மீறுபவராகவே இருப்பார். இந்த அரசின் செயற்பாடுகளை மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின், உடனடியாக தேர்தலை நடாத்துவதற்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். அத்தோடு தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நான்கு வருடத்திற்கு ஒரு தடவை தேர்தலை நடத்த வேண்டும் என சட்டத்தில் இருந்த போதிலும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஒரு வருடம் நீடிக்க அதிகாரம் இருக்கின்றது.

இருந்த போதிலும் தேர்தலை நடத்த நிதி வளம் இருக்கின்றதா? மக்கள் தேர்தலை விரும்புகின்றார்களா என்றெல்லாம் விவாதிக்காமல் தேர்தலை நடாத்த வேண்டும். அவ்வாறே மாகாண சபை தேர்தலை பிற்போட்டு வந்துள்ளார்கள்.

இன்று பார்ப்போமானால் சில மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் அல்லாமல் தனியொரு ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் 5 வருடங்களாக இருந்து வருகின்றது.

அப்படி அல்லாமல் நீதியானதொரு தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டுமென அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US