மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளதால் பலர் பாதிப்பு: எம்.ஏ.சுமந்திரன்
மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருப்பதால் வடக்கில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் பாதிப்படைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, கடந்த இரண்டு மாத காலமாக வடக்கில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை நம்பி வாழும் விவசாயிகளும் தமது படகுகள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு தேவையான மண்ணெண்ணையினை பெற்றுக் கொள்ள முடியாது பெரும் சிரமத்துக்கு உள்ளாகுகின்றனர்.
பொருளாதார சிக்கல்
இதன் விளைவாக விவசாய மற்றும் கடலுற்பத்தி மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நுகர்வு பண்டங்களின் விலை அதிகரித்து காணப்படுவதினாலும் பொதுமக்களின் பல்வேறுவிதமான பிற தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதும், நடைமுறையின் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் மக்கள் பெரும் துயரினை அனுபவிக்கின்றனர்.
வடக்கில் பெரும் பகுதியான குடும்பங்கள் கடற்தொழில் மற்றும் விவசாயத்தினை நம்பி வாழ்வதாலும்
அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ள நிலையிலும், அரசாங்கம் மிகவும் விரைவாக
போதுமான அளவிலான மண்ணெண்ணையினை இறக்குமதி செய்து தடையின்றி விநியோகிக்க துரித
நடவடிகைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக
அவசரமான வேண்டுகோளினை முன்வைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
