அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!
நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பாதுகாப்பிற்காக பொருத்தமான பொலிஸ் அதிகாரிகளை நியமிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாகாணங்களுக்கும் பொறுப்பான மூத்த துணை பொலிஸ் அதிகாரிகளுக்கும், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, பதில் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரச்சினை
நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஒரு பிரச்சினைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பீப்பாய்கள் மற்றும் கொள்கலன்களில் எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொது ஒழுங்கை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் ஒரு பொலிஸ் அதிகாரியை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், இவ்விடயத்தில் தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாகாணங்களுக்கும் பொறுப்பான அனைத்து மூத்த துணை பொலிஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 1,300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ள நிலையில் அனைத்து நிலையங்களிலும் ஒரு விசேட பொலிஸ் அதிகாரியை நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
