எரிபொருள் தட்டுப்பாடு: சுகாதார சேவைகள் முடக்கம்
எரிபொருள் இன்மை காரணமாக வருமுன் காப்பு பணியாளர்களான பொது சுகாதார பரிசோதகர்களது பணியும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(20) பணிக்கு செல்வதற்காக குஞ்சர்கடை, நெல்லியடி, மந்திகை, கிராமக்கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்ற போது பெட்ரோல் இல்லை என சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களும் கைவிரித்த நிலையில் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் திரும்பி சென்றுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி, ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்களே இவ்வாறு பெட்ரோல் இன்றி திரும்பி சென்றுள்ளனர்.

டெங்கு நோய்
அங்கு பெயர் குறிப்பிட விரும்பாத பொது சுகாதார பரிசோதகர்கள் கருத்து தெரிவிக்கும் போது தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்கள் என எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam