எரிபொருள் தட்டுப்பாடு: சுகாதார சேவைகள் முடக்கம்
எரிபொருள் இன்மை காரணமாக வருமுன் காப்பு பணியாளர்களான பொது சுகாதார பரிசோதகர்களது பணியும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(20) பணிக்கு செல்வதற்காக குஞ்சர்கடை, நெல்லியடி, மந்திகை, கிராமக்கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்ற போது பெட்ரோல் இல்லை என சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களும் கைவிரித்த நிலையில் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் திரும்பி சென்றுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி, ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்களே இவ்வாறு பெட்ரோல் இன்றி திரும்பி சென்றுள்ளனர்.

டெங்கு நோய்
அங்கு பெயர் குறிப்பிட விரும்பாத பொது சுகாதார பரிசோதகர்கள் கருத்து தெரிவிக்கும் போது தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்கள் என எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan