நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos)

Vavuniya Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Jenitha Jul 13, 2022 02:48 PM GMT
Report

நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

எரிபொருட்களை பதுக்கி வைத்திருத்தல், கறுப்பு சந்தையில் எரிபொருட்களை விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான நடவடிக்கையினால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரம் nதாடர்ந்தம் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மந்திகை

மந்திகை புலோலி பகுதியில் சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரது வீட்டிலிருந்து பருத்தித்துறை புலனாய்வு பொலிஸாரால் 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 20 லீட்டர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கையின் போதே இவ் எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டவிரோதமான எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் பருத்தித்துறை சாலை சாரதி என்பது குறிப்பிடதக்கது.

இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை பருத்தித்துறை தும்பளை பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் ஒருவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 450 லீட்டர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அத்தியாவசியமான தேவைகளுக்கு வழங்கவென நேற்றைய தினம் புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செய்தி-எரிமலை

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்ட சாலைக்கு சொந்தமான எரிபொருள் இறக்கி சேமித்து வைப்பதற்காக சாலைக்கு சொந்தமாக கொள்கலன் இருந்தும் அது சரியாக பொருத்தப்படாத நிலை கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட அரச பேருந்து சாலைக்கு சொந்தமான பேருந்துக்களுக்கு முல்லைதீவு நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே டீசலினை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். சொந்தமாக எரிபொருள் டாங் மற்றும் எரிபொருள் விநியோகிக்கும் பம் என்பன கொண்டுவரப்பட்ட போதும் அவை இதுவரை சாலையில் பொருத்தப்படவில்லை என சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

முல்லைத்தீவு அரசபேருந்து சாலையின் நிலமைகள் தொடர்பில் வடமாகாண பிராந்திய முகாமையாளர் எஸ்.குணபாலசெல்வத்திடம் இது தொடர்பில் வினவிய போது,

முல்லைத்தீவு சாலைக்கு நீண்டகாலமக எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலை காணப்படுகின்றது முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திலும் ஏனைய சாலைகளிலும் இருந்து எரிபொருட்களை வழங்கிவருகின்றோம்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரிடம் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் முல்லைத்தீவு சாலைக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தினை நிறுவி தருவதற்கு ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

மாகாணத்தில் அரச பேருந்துக்களுக்கு எரிபொருள் பிரச்சினை இல்லை ஆனால் முல்லைத்தீவு சாலையில் எரிபொருள் தாங்கி இல்லாத நிலை அவர்களுக்கு பிரச்சினைதான் அது விரைவில் தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

செய்தி - கீதன்

கிளிநொச்சி

கிளிநொச்சியில் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டீசல் மற்றும் எரிபொருள் எதுவும் மாவட்டத்தின் விவசாய தேவை மற்றும் அறுவடை என்பவற்றுக்கு வழங்கப்படாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் குறிப்பிட்ட சில இடங்களில் அறுவடை செய்யக்கூடிய நிலையில் காணப்படுகின்ற போதும் அவற்றை அறுவடை செய்வதற்கு எரிபொருள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதே நேரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தில் அறுவடைக்கு தேவையான எரிபொருளை பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்ட போதும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட டீசலில் 1500 லிட்டர் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைவிட ஏனைய டீசல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றதே தவிர விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதையும் அறுவடை செய்கின்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக எரிபொருளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி- யது

வவுனியா

வவுனியாவில் அத்தியாவசிய தேவைகளின் பெயரில் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றிற்கு கலனில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதால் 5 நாட்களாக வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டியிருந்ததாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நாட்களுக்கு பின்னர் நேற்று காலை பெட்ரோல் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

இதன்போது பெட்ரோல் எரிபொருளை பெறுவதற்காக மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கார்கள் என்பன நீண்ட வரிசையில் காத்து இருந்தன. எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அத்தியாவசிய தேவைக்கு என்னும் பெயரில் அரசாங்க அதிபரின் சிபார்சு கடிதத்துடன் தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்று கலன்களில் எரிபொருளை பெற்றுச் சென்றிருந்தது.

இதேபோன்று, வேறு பலருக்கும் கொள்கலன்களில் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றிருந்தது. கலன்களில் எரிபொருள் விநியோகம் இடையிடையே இடம்பெற்றதுடன், தனியார் நிதி நிறுவனங்களின் கார்கள் உட்பட பல கார்கள் முறையான வரிசையின்றி செல்வாக்கு அடிப்படையில் எரிபொருளை பெற்றிருந்தன.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

இதன்காரணமாக, கடந்த 5 நாட்களாக பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த முச்சக்கர வண்டியை வாழ்வாதாரமாக கொண்ட முச்சக்சக்கர வண்டிகள் உட்பட பலரும் எரிபொருளை பெற முடியாது வீடு திரும்பியிருந்ததுடன், மீண்டும் 6 வது நாளாக பெட்ரோலுக்காக காத்து இருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் அனுமதியுடன் சிலிங்கோ காப்புறுதி நிறுவனத்தினர் பெட்ரோல் எரிபொருள் கோரிக்கையை முன்வைத்தனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

இதன்போது அவசர விபத்து சேவை காப்புறுதிப் பிரிவின் மாவட்டத்திற்கான ஒரு வாகனத்திற்கு பெட்ரோல் வழங்க அனுமதி வழங்கியிருந்தேன். வேறு எந்த வாகனத்திற்கோ அல்லது கலன்களில் பெட்ரோல் நிரப்புவதற்கோ குறித்த தனியார் நிதி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கவில்லை. அத்துடன், கலன்களில் பெட்ரோல் எடுப்பதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

செய்தி- தீபன் 

மட்டக்களப்பு

இலங்கையின் இரண்டாவது பெரிய விவசாய மாவட்டமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு அறுவடைக்கான எரிபொருட்களை வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் முயற்சியினால் இன்று விவசாயிகளுக்கு எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. மட்டக்களப்பு மண்முனைப்பற்று கோவில்குளம் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக இந்த எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தும் பாதிப்பு (Photos) | Fuel Shortage To Affect The Normal Life Of People

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தியின் தலைமையில் விவசாயிகளுக்கான எரிபொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. வெல்லாவெளி,பட்டிப்பளை,வவுணதீவு ஆகிய விவசாய கண்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய தினம் எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் விவசாயிகளின் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மட்;டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருட்கள் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   


செய்தி-குமார்                   

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US