எரிபொருள் வரிசைகள் இல்லாமைக்கான காரணத்தை வெளிப்படுத்தும் அஜித் நிவாரட் கப்ரால்
மக்களின் கைகளில் பணமில்லாத காரணத்தினால் எரிபொருள் வரிசைகள் இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாரட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எரிபொருளுக்கான வரிசை காத்திருப்புக்கள் தற்பொழுது இல்லை அது மகிழ்ச்சியளிக்கின்றதா என அஜித் நிவாட் கப்ராலிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருட்களின் நுகர்வு வீழ்ச்சி
மேலும் கூறுகையில், நாட்டில் டீசல் நுகர்வு 33 வீதத்தினாலும், பெட்ரோல் நுகர்வு 50 வீதத்தினாலும், மண்ணெண்ணெய் நுகர்வு 75 வீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்த நிலையினால் இவ்வாறு எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் தனியார் வாகனங்களை பயன்படுத்துவது குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |