எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் - சஜித் பிரேமதாச
எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றை கூட்டியேனும் எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு உயர்வடைந்து மக்கள் அன்றாடம் உணவு உட்கொள்ள முடியாது வாழும் மக்களினால் எரிபொருள் விலையேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை விநியோகம் செய்யும் நிகழ்வு கொழும்பில் இன்று நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.