நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
நாட்டில் எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.ஓ.சீ அல்லது இந்தியன் லங்கா இந்தியன் ஒயில் கோர்பிரேசன் நிறுவனத்தினால் விற்பனை செய்யும் எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam