நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு
புதிய இணைப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
இதேவேளை, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.
மேலும், மண்ணெண்ணெய்யின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
முதலாம் இணைப்பு
விலை சூத்திரத்திற்கு அமைய மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு முந்தைய கடந்த 10 மாதங்களில் எரிபொருட்களின் விலை மூன்று தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து தடவைகள் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை திருத்தம்
மார்ச் மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் கீழ் ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நவம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri