அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் பற்றி பேசப்படவில்லை – கெஹலிய
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் பற்றி பேசப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமயில் நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இவ் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி எதுவும் பேசப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.