எரிபொருள் விலை குறைப்பு இல்லை..! இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஸ்தீரத்தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்டி, இந்த அறிவிப்பினை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி
இதேவேளை மத்திய கிழக்கு போரின் போது அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் இன்னும் நாட்டில் விநியோகிக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் கூறியுள்ளார்.
எனவே, இந்த நேரத்தில் எரிபொருள் விலையைக் குறைக்க இயலாது என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.