எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பினை ஏற்க முடியாது! மொட்டு கட்சி
எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பினை ஏற்க முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது சுமைகள்
கட்சி என்ற ரீதியில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு என்பனவற்றின் ஊடாக மக்கள் மீது சுமைகள் திணிக்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அநேகமான பகுதிகளில் தனித்து போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி
சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி அமைத்து அதன் ஊடாக தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan