மத்திய அதிவேக வீதியில் எரிபொருள் மோசடி! எழுவர் கைது
சீனாவினால் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும், மத்திய அதிவேக வீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது 6 வாகனங்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் இருந்து எரிபொருளை திருடும் இந்த நீண்டகால மோசடியை சிறப்பு அதிரடிப்படை முறியடித்துள்ளது.
இந்தநிலையில் வெயங்கொட மற்றும் வந்துராவ பகுதிகளுக்கு இடையே உள்ள மத்திய அதிவேக வீதி நுழைவாயிலில் எரிபொருள் நிரப்பப்பட்ட பவுசருடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெயங்கொடை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.