இருமடங்காக அதிகரிக்க போகும் எரிபொருள் ஒதுக்கீடு! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரு மடங்காக அதிகரிக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இரு மடங்கு எரிபொருள் ஒதுக்கீடு
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த மாதம் எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது 14 லீட்டராக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீட்டு திருத்தமும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில்,
முச்சக்கர வண்டி (சிறப்பு) (Three-wheeler - Special) : 22 லீட்டர்
முச்சக்கர வண்டி (பொது) (Three-wheeler - General) : 14 லீட்டர்
மோட்டார் சைக்கிள் (Motorbike) : 14 லீட்டர்
பேருந்து (Bus) : 125 லீட்டர்
கார் (Car) : 40 லீட்டர்
நில வாகனம் (Land Vehicle) : 45 லீட்டர்
லொறி (Lorry): 125 லீட்டர்
சிறப்பு நோக்க வாகனம் (Special Purpose Vehicle): 45 லீட்டர்
வான் (Van): 40 லீட்டர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
