சுதந்திரக் கட்சியின் மே தினம் கொழும்பில் - மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள்நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பில் மே தின கூட்டத்தை நடத்துவது பொருத்தமானது என கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இணைந்து தீரமானத்தை எடுத்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன,
குறிப்பாக எமது கட்சியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், நாட்டின் உழைக்கும் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வறியவர்கள் என அனைத்து சிறிய மனிதர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது.
இவர்களுக்கு உரிமைகள், சிறப்புரிமைகள் வழங்கி, அவர்களை முன்னேற்றியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாறு. இதனால், நாங்கள் மே தினத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்த எதிபார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.