மே தினக் கொண்டாட்டங்களில் தனி வழி செல்லும் சுதந்திரக்கட்சி - ரோஹன லக்ஸ்மன் பியதாச
மே தினக் கொண்டாட்டங்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி வழி செல்லத் தீர்மானித்துள்ளது.
இதன்படி மே தினக் கொண்டாட்டங்கள் சுயாதீனமான அடிப்படையில் முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மே தினக் கொண்டாட்டங்கள் பிரமாண்டமான முறையில் நடாத்தப்பட வேண்டுமெனக் கட்சியின் தொழிற்சங்கங்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1956ம் ஆண்டு பிரதமராகப் பதவி வகித்த பண்டாரநாயக்கவினால் மே தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே தினக் கொண்டாட்டங்களில் பல்வேறு தரப்புக்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.