சர்வதேச தொழில் சந்தைக்கு ஏதுவாக இளைஞர்களுக்கு இலவச தொழில்பயிற்சி
சர்வதேச தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு இளைஞர்களுக்கு இலவச தொழில்பயிற்சிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் போது உள்நாட்டு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச தொழில் பயிற்சியில் முன்னுரிமை வழங்கவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தொழில் அமைச்சில் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அதன் போது தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,
வேலை இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் குழந்தைகளுக்கு பயிற்சிகளில் முன்னுரிமை அளிக்கப்படும்.தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சின் தலையீட்டுடன் சுதந்திர வர்த்தக வலயங்களில் தொடர் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மனூஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.