40 நாடுகளில் இருந்து இலங்கை செல்வோருக்கு முக்கிய தகவல்!
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச வீசா வசதி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போது, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மேம்படுத்தும் நோக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா விசா
இந்த விசா நடைமுறை ஆறு மாதங்களின் பின்னர் மீளாய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் தொடர்வதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

தகுதியுள்ள 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 30 நாட்கள் தங்கியிருக்கக்கூடிய சுற்றுலா விசாக்கள் எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.