தலவாக்கலையில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச புலமைபரிசீல் பரீட்சை கருத்தரங்கு
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7 பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு புலமைபரிசீல் பரீட்சை இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலத்தில் கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் லயன்ஸ் கிளப் ஊடாக புலமைப்பரிசில் இலவச கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
தலவாக்கலை தமிழ்மகாவித்தியாலத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்களில் பிரதேச பாடசாலைகளான கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயம்,கல்கந்தவத்தை தமிழ் வித்தியாலயம்,வங்கி ஓயா இலக்கம் 1,இலக்கம் 2 பாடசாலைகள்,பெயார்வல் தமிழ் வித்தியாலயம்,பாமஸ்டன் தமிழ் வித்தியாலயம் ஆகிய மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
இலவச புலமைபரிசீல் கையேடு
குறித்த கருத்தரங்கின் போது கிரேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்திற்கான நீர்த்தாங்கி ஒன்றும் கையளிக்கப்பட்டதோடு பங்குபற்றிய மாணவர்களுக்கு இலவச புலமைபரிசீல் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,வளவாளர்கள் உட்பட லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.