இலங்கையில் தடுப்பூசி பெறாமல் அட்டையில் பதிவிட்டு செல்லும் புதிய மோசடி அம்பலம்
தென்னிலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அதற்கான அட்டையில் பதிவிட்டு சென்ற சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி - சங்கமித்தா வித்தியாலயத்தில் தடுப்பூசி நிலையத்திற்கு வருகைத்தந்து தடுப்பூசி பெறாமல் தடுப்பூசி அட்டையில் பதிவிட்டு செல்ல சிலர் முயற்சித்துள்ளனர்.
குறித்த மோசடியாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி எத்திலிகொட மற்றும் கொன்கஹ பிரதேசத்தை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அ
வர்கள் தடுப்பூசி நிலையத்திற்கு வருகைத்தந்து அட்டையில் மாத்திரம் பதிவிட்டு செல்லும் போது அங்கிருந்த சுகாதார அதிகாரி இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர்களை தடுத்து வைத்து பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
