வெளிநாட்டு தூதரகங்களில் இடம்பெறும் மோசடி - அநுர எடுக்கவுள்ள நடவடிக்கை
வெளிநாடுகளிலுள்ள தூதுவரலாலயங்களில் முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் பணியாற்றி வருகின்றமை தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலுள்ள தூதுவரகங்களில் இவ்வாறு பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களான ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டீ சில்வா, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி.திஸாநாயக்க, பந்துல குணவர்தன, சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் மிகவும் நெருக்கமான உறவினர்கள் பணியாற்றுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கை
அதுமட்டுமன்றி ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான பலர் தூதரகங்களிலுள்ள பல்வேறு பணிகளில் கடமையாற்றி வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களின் செயற்பாடுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan