இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் சர்வதேச விமான நிறுவனங்கள்
நான்கு புதிய விமான நிறுவனங்கள் டிசம்பரில் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ரஷ்யாவின் AZUR விமான சேவையானது டிசம்பர் 3 ஆம் திகதி முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
கஸகஸ்தானில் இருந்து AIR ASTANA விமான சேவை அன்றைய தினத்தில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை நேரடி விமான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில் பொலாந்து LOT POLISH விமான நிறுவனம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதியில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக இத்தாலியில் இருந்து NEOS விமான சேவை அடுத்த மாதம் 15ஆம் திகதியில் இருந்து விமான பயணங்களை ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த சில நாட்களாக AEROFLOT, AIR FRANCE உட்பட நான்கு புதிய விமான நிறுவனங்கள் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளன.
இலங்கைக்கு நேரடி விமான சேவையுடன் கூடிய புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இலங்கையின் சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்ப உதவும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022