விசேட சுற்றி வளைப்பி்ல் மேலும் நால்வர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கையில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது சம்பவமானது, நேற்றைய தினம் (20.03.2024) கொழும்பு குற்றப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி முதல் செயற்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் பொருட்டே இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
19 நபர்கள் கைது
இதன்படி, மருதானை, முகத்துவாரம், கிராண்ட்பாஸ் மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 44, 26, 23 மற்றும் 28 வயதுடைய மூன்று குற்றக் குழுக்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 450 மில்லிகிராம் அளவு ஹெரோயின் எனப்படும் போதைப்பொருள், 7 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் எனப்படும் போதைப்பொருள், 3 கிராம் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பப்பட்டுள்ளன.
மேலும், பாதாள உலகத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்த 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
