அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று(13) காலை வலி.மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள அமரரது உருவச் சிலையடியில் இடம்பெற்றது.
பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வின்போது அமரரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி
இதேவேளை அமிர்தலிங்கம் அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் மூளாயில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் அமரரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளர் ச.ஜயந்தன் ,பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
