கைது செய்யப்பட்ட மகிந்த தரப்பு அரசியல்வாதிக்கு பிணை
புதிய இணைப்பு
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்கவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிற்பகல் பிணை வழங்கியுள்ளது.
காணி ஒன்றின் வரைப்படத்துக்கு அனுமதி வழங்கும் போது இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டு மிலன் ஜயதிலக்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இவர் தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் இந்த முறைகேடு நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு தொம்பே பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய போது சுரங்க அனுமதி வழங்குவதற்காக தொழிலதிபரிடமிருந்து 600000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam