தந்தையின் பிறந்த நாளில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் உருக்கமான பதிவு
அரசியலில் பிரவேசிக்கும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்றாலும் தனிப்பட்ட இயலுமையால், முக்கியம் என எண்ணும் சமூக சேவைகளில் ஈடுபட எதிர்ப்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க (Vimukthi Kumaratunga) தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கௌரவமான, சாதாரண மற்றும் பிரசித்தியற்ற வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் தனது தனித்துவத்திற்கு மதிப்பளிக்குமாறு இலங்கையின் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாய் நாட்டை நேசிக்கும் தான், தனிப்பட்ட இயலுமை மூலம் முக்கியமானது என எண்ணும் சமூக சேவைகள் குறித்து மற்றவர்களுக்கு விளக்கவும் , அவற்றுக்காக செயற்படவும் எதிர்ப்பார்த்துள்ளதாக விமுக்தி குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
விஜய குமாரதுங்கவின் 76 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவை ஒன்றை இட்டிருந்த விமுக்தி, “தந்தை செய்தவற்றை செய்ய மேலும் ஒரு மனிதன் இல்லை. இன்று தந்தையின் பிறந்த நாள், அவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 76 வயது.
தந்தையை இல்லாமல் செய்த மனிதர்களுக்கு என்ன ஆறுதல் கிடைக்க போகின்றது?. அப்பாவி மக்களின் பல எதிர்ப்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் வகையில் எனது தந்தை தனது உயிரை இழப்பீடாக செலுத்தினார் என்பது எமக்கு தெரியும். எனினும் அவரது அர்ப்பணிப்பை இந்த உலகில் எவரால் செய்ய முடியும் என்பதை நான் அறியேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.