மின் விநியோகத்தடை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
ஜனாதிபதியாக தாம் பதவி வகித்த காலப்பகுதியில் கையொப்பமிட்ட பல வர்த்தமானி அறிவித்தல்கள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடப்பு அரசாங்கம் மணல் மற்றும் மண் அகழ்வுக்கான அனுமதி பத்திரத்தினை தடை செய்துள்ளமை தமக்கு வியப்பினை அளித்துள்ளது.
அத்துடன் தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் 65 வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின் கட்டமைப்பினை புனரமைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்ட நிலையில், அதனை சிலர் விமர்சித்தது மாத்திரமின்றி நகைப்புக்குள்ளாக்கினர்.
அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களையும் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று மின் விநியோகத்தடை தொடர்பில் நாம் கவலையடையத் தேவையில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri