பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டமூலம்! முன்னாள் நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்" என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலீடாகவே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பது தொடர்பான உத்தேச சட்டவரைவு முன்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
விஜயதாஸ ராஜபக்ச
இது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது.இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணியான அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை தற்போது வகிக்கின்றார்.
ISIS அமைப்பிற்கு எதிராக மோசமான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள அமெரிக்கா! பகிரங்கப்படுத்தியுள்ள ட்ரம்ப்
பயங்கரவாதத் தடைச் சட்டம்
மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்ததன் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியல் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுவந்தது. அடக்குமுறைக்காகவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

இதன் பின்னரே, பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து உருவாகியது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இருந்து அழுத்தங்கள் வந்தன.
நல்லாட்சியின்போது 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் இடம்பெறும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தி
2022 ஆம் ஆண்டு இடைக்கால அரசில் நீதி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அதற்கமைய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றம் சென்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை உருவாக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தைக் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளும் சிவில் அமைப்பினரும் ஏற்றுக்கொண்ட போதும், தேசிய மக்கள் சக்தியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாரிய அச்சுறுத்தல்
அநுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
நல்லாட்சியில் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது சட்டமானால் அரசமைப்பால் உரித்தாக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். எனவே, மேற்படி சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன்." - என்றார்.
பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டு, அது சட்டமூலமாக வெளியாகி, முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே, உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனாக நடிக்கும் ஸ்டாலின் முத்துவின் குடும்ப புகைப்படங்கள் Cineulagam
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri