நாட்டில் காட்டுசட்டங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது - பாதுகாப்பு செயலாளர்
தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் இன்று இடம்பெற்ற மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கருத்து வெளியிட்டார்.
ஒரு நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், தேசியப் பாதுகாப்பு இன்றியமையாத காரணி என்பதை சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த காலங்களில் வன்முறைக்கு வித்திட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்ட போது சட்டத்தரணிகள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதையும் பாதுகாப்பு செயலாளர் நினைவு கூர்ந்தார்.
இந்த நாட்டில் காட்டுசட்டத்தை அமுல்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.