இலங்கையில் இருந்து 34 வெளிநாட்டவர்களை நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை
நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் ஒரு தங்குமிடத்தில் தங்கியிருந்த போது, 34 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீசா காலவாதியான நிலையில் நிலையில் நாட்டில் தங்கியிருந்தவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 19-54 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் என்று கூறப்படுகிறது.
குடியகல்வுத் துறை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களை விரைவில் பங்களாதேஷுக்கு நாடு கடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.