பம்பலப்பிட்டியில் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐந்து வெளிநாட்டவர்கள் கைது - பெருந்தொகை பணமும் மீட்பு
சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பம்பலப்பிட்டியின் லொரிஸ் வீதியில் சட்டவிரோதமான முறையில் இந்த சூதாட்ட நிலையம் இயங்கி வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த சீனப் பிரஜைகளிடமிருந்து 1088500 ரூபா பணமும், 2600 யுவான் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி இவ்வாறு சூதாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும், இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புத்தாண்டு காலத்தில் கிராமிய மட்டத்தில் சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.