காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் பலி
பொத்துவில் மணச்சேனை, கோமாரிய பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானையினால் மிதியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இத்தாலிய சுற்றுலாப் பயணியான 50 வயதான ஜிஞ்சினோ பாலோ, மற்றுமொரு இத்தாலிய சுற்றுலாப் பயணியுடன் கொமரியா பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது குறித்த சுற்றுலாப்பயணி காயமடைந்த நிலையில், 1990 அவசர நோயாளர் காவு வாகனம் மூலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அத்தியட்சகர் வெஹித தேவபியவின் பணிப்புரையின் பேரில் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் செனவிரத்ன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri