வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்ணுக்கு நேர்ந்த கதி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி பணமோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர், கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை முன்னெடுத்து வந்த, பெண் உரிமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, சுமார் 40 இலட்சம் ரூபாயை அவர் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பண மோசடி முறைப்பாடு
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணினால் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அனுமதி பத்திரமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
