வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்ணுக்கு நேர்ந்த கதி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி பணமோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர், கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை முன்னெடுத்து வந்த, பெண் உரிமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, சுமார் 40 இலட்சம் ரூபாயை அவர் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பண மோசடி முறைப்பாடு
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணினால் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அனுமதி பத்திரமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam