வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண்ணுக்கு நேர்ந்த கதி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி பணமோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர், கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை முன்னெடுத்து வந்த, பெண் உரிமையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, சுமார் 40 இலட்சம் ரூபாயை அவர் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பண மோசடி முறைப்பாடு
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினருக்கு 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணினால் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அனுமதி பத்திரமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam