அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எச்சரிக்கை
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 1000 கொள்கலன் அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்காக போதுமான டொலர்களை வங்கிகளுக்கு அனுப்புமாறு அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்காது போனால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்று இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பருப்பு, அரிசி, சீனி, வெள்ளைப்பபூடு உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையே துறைமுகத்தில் இருந்து உடனடியாக விடுவிக்கவேண்டியுள்ளது.
இந்தநிலையில், இறக்குமதிப் பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும்போது, தாமதக்கட்டணம் போன்ற கட்டணங்களை அறிவிடவேண்டாம் என்றும் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
இந்த கட்டணங்களை அகற்றாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யமுடியாதிருக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் துறைமுகத்தில் 500 கொள்கலன்களே தேங்கியுள்ளதாக சுங்கப்பணிப்பாளர் ஜீ.வீ. ரவிப்பிரிய தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri