இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம் (Photos)
இலங்கையிலிருந்து இந்தியா சென்று அங்கு சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோடி ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு பல தரப்பினரும் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையில்,
முதலமைச்சரே, இன்று 6ஆவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் சகோதரர்கள் 10 பேர் விடுதலைக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஒரு சொட்டு உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் முழுமையாகப் பட்டினியாக இருந்து தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழ முடியாதா என்ற எண்ணத்தோடு இந்த உண்ணாநிலை போராட்டத்தில் காத்திருக்கிறார்கள்.
எத்தனை முறை அவர்கள் தங்கள் குழந்தைகளை அள்ளிக் கொஞ்ச முடியாதா என தவித்திருப்பார்கள். அவர்களது உறவுகள் உடல்நலம் முடியாமல் இறுதிக்கட்டங்களில் வைத்தியசாலைகளில் இருக்கும் பொழுது ஒரு முறையாவது அவர்களைச் சந்தித்து உதவ முடியாது என ஏங்கி இருப்பார்கள்.
அவர்கள் குடும்பங்கள் மிகவும் வறுமையில் இருக்கும் இந்நிலையில் அவர்களுக்கு உழைத்துக் கொடுக்க நாதி இல்லாதவர்களாக இந்த சிறையிலே தினமும் அழுது கொண்டு வாழ்கின்றனர்.
இலங்கையிலே ஏற்பட்டுள்ள தற்போதைய வறுமையின் காரணமாக தாங்கள் தாராள மனம் கொண்டு அத்தனை கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளீர்கள்.
ஆனால் அவர்கள் இங்கு உமக்கு அருகிலேயே பட்டினியாக தங்கள் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களையும் ஒருமுறை கண்ணெடுத்துப் பார்த்து அவர்களின் விடுதலைக்காக உதவி செய்யுங்கள். மிகவும் மிகவும் மனமிரங்கி கேட்டுக்கொள்கிறோம். அவர்களை விடுதலை செய்து குடும்பங்களோடு வாழ விடுங்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
