பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துக்களை திருத்துவது குறித்து கவனம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில சரத்துக்களை திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவை இணைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் அமைப்புக்கள் மற்றும் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் சர்வதேசத்தில் பிழையான ஓர் கருதுகோள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் சர்வதேசத்தில் எழுந்துள்ள மனித உரிமை மற்றும் இன நல்லிணக்கம் குறித்த பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.