பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹா ஓயா படுகையின் சில ஆறுகள் அமைந்துள்ள பகுதிகளில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
மழை நிலைமை நீடித்தால் அடுத்த 36 மணி நேரத்திற்குள் அலவ்வ, திவுலப்பிட்டி, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மகா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
மகா ஓயா படுகை
மழை நிலைமை மற்றும் மகா ஓயா படுகையை நீர்ப்பாசனம் செய்யும் ஆறுகளின் நீர் மட்டங்களை நீர்ப்பாசன திணைக்களம் பகுப்பாய்வு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், தெதுரு ஓயா படுகையின் மேல் மற்றும் நடுத்தர பகுதிகளில் கணிசமான மழைப்பொழிவு காரணமாக தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வெள்ள அபாயத்தை நெருங்கி வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 16,250 கன அடி வீதம் நீர் தெதுரு ஓயாவில் திறந்து விடப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தால் தற்போது பெறப்படும் நீர் கொள்ளளவைப் பொறுத்து எதிர்வரும் மணித்தியாளங்களில் இந்த நிலைமை அதிகரிக்கக்கூடும்.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக, தெதுரு ஓயாவுக்கு அமைந்துள்ள வாரியபொல, நிகவெரட்டிய, மஹாவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த வெள்ளப் பள்ளத்தாக்கின் கீழ் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள கீழ் பள்ளத்தாக்குகளில் வசிப்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்கள், அணுக கூடிய வீதிகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரும் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




