வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பிரதான ஆறுகளின் நீர் மட்டம் மிக அதிகமாக இருப்பதால், மழை பெய்தால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டின் 6 மாகாணங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு அருகில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெள்ள அபாயம்
அதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்களில் இந்த ஆபத்து உள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மேற்கூறிய மாகாணங்களில் வெள்ள அபாயம் உள்ளமையினால் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam