இரத்மலானை - யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் (PHOTOS)
இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான உள்நாட்டு விமான சேவை நேற்றுமுன் தினம் (01.07.2023) ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ச ( Aruna Rajapaksha ) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும், இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
12 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய செஸ்னா 208 இந்தப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.
இந்த விமான பயணத்திற்கான ஒரு வழிக்கட்டணமாக ரூ.22 ஆயிரம் ரூபாவும், இருவழிக்கட்டணமாக 41500 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விமான சேவை மூலம் யாழ்ப்பாணம் சென்று வருவதற்கு வசதியாக இருக்கும் எனவும், இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ச கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



