பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட விமானம்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமொன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (08.04.2023) காலை இடம்பெற்றுள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட விமானம்
குவைட்டில் இருந்து வந்த நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை பெய்த கனமழை பார்வைத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், சில விமானங்களின் பயணங்களும் தாமதமாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட விமானம்

குவைட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 230D விமானம் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் விமானம் காலை 6.10 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam