நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் மரணம்
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 5 விபத்துக்களில் ஐவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மாத்தறை, தெனியாய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சென்று வடிகானொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த நபரும் தெனியாய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது மோட்டார் சைக்கிள் செலுத்துநர் மரணமடைந்தார்.
கோட்டபொல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார். இரத்தினபுரி பெல்மடுல்ல வீதி, பாத்தகொட பிரதேசத்தில் லொறியொன்று மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். கடவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபரே உயிரிழந்தார்.
இதேவேளை, மாத்தளை – கண்டி வீதி, வரக்காமுர பிரதேசத்தில் கண்டி நோக்கிப் பயணித்த வானொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கொங்ரீட் தூண் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த வானின் சாரதி, மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். வரக்காமுர பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது நபரே உயிரிழந்தார்.
மாத்தறை, திஹகொட பொலிஸ் பிரிவு, ஹக்மன வீதி நாதுகல பிரதேசத்தில் மாத்தறை நோக்கிப் பயணித்த ஓட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரி பெண்ணொருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டோ சாரதி மற்றும் பாதசாரி பெண் ஆகியோர் மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது ஓட்டோ சாரதி மரணமடைந்தார். நாமின பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது நபரே உயிரிழந்தார்.
கேகாலை, ருவன்வெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரக்காபொல கரவனெல்ல வீதியில் வரக்காபொல நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்று பாதசாரி பெண்ணொருவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண், கரவனெல்ல வைத்தியசாலையில்
சேர்க்கப்படும்போது மரணமடைந்தார். ரூவன்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது நபரே
உயிரிழந்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 13 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022