கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரட்டை வேடம் போடுகிறாரா..! சாட்சியங்களை வெளிப்படுத்திய மீனவ பிரதிநிதி
தாம் கடலட்டை வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் பேசியது அரசாங்கத்துடன் இணைந்து இயக்குகிறரா என்ற சந்தேகத்தை தூண்டியுள்ள எனவடமாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று(23.06.2026) நடத்த ஊடகச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் முக்கிய பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று ஒரு கிலோ மீனின் விலை 2000 தொடக்கம் 3000 ரூபாவிற்கு மேல் சென்றுள்ளது. இதற்கு மீன் பெருக்கம் இல்லாமைக்கு காரணம் அதிகளவிலான உள்ளூர் இழுவை மடிவு படகுகளின் சட்ட விரோத மீன்பிடி முறையை காரணமாக இருப்பதுடன், இந்திய இழுவை மடி படகுகளின் மீன் பெருக்கிடங்களை இல்லாமல் செய்வதாகும்.
மீன் பெருக்கம் குறைந்து சென்றுள்ளமையால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் மீன் குறைந்த விலை 1500 இருந்து 3500 வரை விற்பனையாகிறது.
இதேவேளை, கடலட்டை பிடித்தல் தொழில் காரணமாக தீவக கடல் உட்பட அனைத்து கடல் பிரதேசங்களிலும் மீன் உற்பத்தியிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், மீன்களின் வாழ்விடமான பவளப்பாறைகளும், தற்போதும் தொடர்ச்சியாக மின்னொளி பாய்ச்சி சுருக்குவலை தொழில் இடம்பெற்று வருவதனாலும் அதிகளவான சிறிய மீன் குஞ்சுகள் அழிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக சிறு கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடித்தொழிலில் பாரிய பாதிப்பான நிலையில் காணப்படுவதாகவும், கூலர் வாகனங்களில் சட்டவிரோத ஒளிபாய்ச்சி மற்றும் சுருக்கு வலை மீன்பிடி முறை மூலம் பிடிக்கப்பட்ட மீனினங்களை ஏற்றிக்கொண்டு செல்கின்ற போது, உரிய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.
மேலும், தற்போது கடற்படையின் பணி கடற்கரையிலிருந்து எவன் உளவியந்திரத்தை பயன்படுத்தி கரவலை தொழிலை மேற்கொள்கிறானோ அவனை மட்டும் கைது செய்வது தான்.
தற்போது கடற்படை இலை, குழைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றவர்களையோ, அல்லது மின் ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடுபவர்களையோ கைது செய்வதில்லை.
அரசாங்கத்துடன் சேர்ந்து விட்டாரா கஜேந்திரகுமார்
கடற்படை பல கடற்றொழிலாளர்களை தாக்கியதாகவும், கடற்படை தாக்கியவர்களை தாம் நேரில் சென்று சந்தித்ததாகவும் இது தொடர்பில் கடற்படைக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்கு கடற்படையால் தாக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் அச்சப்படுகிறார்கள்.
இவ்வாறான சட்ட விரோத செயல்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில், நாங்கள் கடற்தொழிலுக்கு சென்று இப்போது பல மாதங்கள் ஆகுகின்றன.

கடலட்டை வளர்ப்பு மூலம் கடல் வளங்கள் அழிந்து, மீன் இனம் பெருக்கம் இல்லாமல் போகின்றது. இதனால் கடல் அட்டை வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று கடற்றொழில் சமூகம் குறிப்பிட்டு வந்த நிலையில், அண்மையில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடல் அட்டை பண்ணைகளை பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கடல் அட்டை வளர்ப்பு பண்ணை மீண்டும் வழங்கப்பட்டால் அதற்கு தேவையான கடலட்டை குஞ்சுகளை கடலில் இருந்து தான் பிடித்து கடலட்டை வளர்ப்பு பண்ணைகளில் விட வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் கடலில் கடலட்டை குஞ்சுகளை உண்டு இனப்பெருக்கம் செய்கின்ற மீன்கள் இல்லாமல் போய்விடுவதுடன், இந்த நிலைமையை பார்த்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகிறதா என்ற எண்ணம் தோன்றுகின்றது என்றார்.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan