தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்: கிழக்கு ஆளுநர் அறிவுரை
திருகோணமலையில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கடற்றொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தினுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இன்று(14.09.2023) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.
ஆளுநர் சந்திப்பு
இந்நிலையில் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்றொழில் சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இந்ந கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத கடற்றொழிலில் ஈடுபடுபவருக்கு எதிராக கடற்றொழில் திணைக்களம்,கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள், அதிரடி படையினர் ஆகியோரை சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கடற்றொழிலமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
