சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சுருக்குவலை மற்றும் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கோரி வட்டுவாகல் பாலத்தில் இருந்து கோட்டபாய கடற்படை முகாம் வரை சென்ற கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த கடற்தொழில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த
இந்த கவனயீர்ப்பு போராட்ட நடவடிக்கையின் போது முல்லைத்தீவு கடலினை நம்பியே 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சாலை தொடக்கம் கொக்கிளாய் வரையான கடற்பரப்பில் சுருக்குவலை ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வாழ்வாதார பாதிப்பு
கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் சிறுமீன் இனங்களும் அழிக்கப்படுகின்றன.
இதற்கமைய கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் கட்டுப்படுத்த வேண்டும்.
கடற்றொழிலாளர்களின் கோரிக்கை
கடற்தொழில் அமைச்சர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்ப்டட தீர்மானத்திற்கு அமைய காவல் அரண்களை அமைத்து கட்டுப்படுத்தி தருமாறும் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அத்துடன் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளை தளபதிற்கும் கோட்டபாய கடற்படை முகாம் தளபதிற்கும் கடற்றொழிலாளர்கள் மனு கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சருக்கும் விடையத்தினை தெரியப்படுத்தி இன்று (17.04.2023) இரவு முடிவு கூறப்படும் என அறிவித்துள்ளதை தொடர்ந்து கடற்றொழிலாளர்கள் கலைந்து
சென்றுள்ளார்கள்.

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
