ஆயிரத்தை தாண்டிய மீன்களின் விலை! இதுதான் காரணம்
மே மாதம் முதல் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், மீன்களை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மீன்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக பொது மக்களும் தெரிவித்துள்ளனர்.
மீன்களின் விலைகள்
தற்போதைய மோசமான வானிலை மற்றும் பருவமழை காரணமாக கடல் கொந்தளிப்பாக இருப்பதால் அதிகமான கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில்லை.
இதன் விளைவாக தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மீன்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, ஹட்டனில், தலபத், கொப்பரா ஆகிய மீன்களின் ஒரு கிலோ கிராமுக்கான சில்லறை விலை, 3,200 ரூபாய் முலை 3,400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
சில்லறை விலை
தோரா 3,800 ரூபாய், கெலவல்லா 2,900 ரூபாய், பலயா 1,800 ரூபாய் மற்றும் பரவு 2,000 முதல் 2,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, லின்னா 1,300 ரூபாய், சாலையோ 900 ரூபாய், பியா மெஸ்ஸன் 900 ரூபாய் உருலோ 1,700 ரூபாய், நெத்தலி மீன் 700 ரூபாய், இறால் 2,400 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், மீன் விலை உயர்வு இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என்றும், இதற்கு இணையாக குளத்து மீன்களின் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri
