அமெரிக்காவில் முதன்முதலாக உறுதி செய்யப்பட்ட நோய் தொற்று
அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு திருகுப் புழு(screwworms) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகுப் புழு என்பது உயிருள்ள சதையை உண்ணும் ஒரு ஒட்டுண்ணி ஆகும்.
இந்த ஒட்டுண்ணி கோக்லியோமியா ஹோமினிவோராக்ஸ் எனப்படும் ஈக்களில் இருந்து உருவாகின்றன.
ஒட்டுண்ணி
பெண் ஈக்கள், கால்நடைகள் மற்றும் மான் போன்ற விலங்குகளின் காயங்களில் தங்கள் முட்டைகளை இடுகின்றன.
சுமார் 24 மணி நேரத்திற்குள், முட்டைகள் பொரிந்து, அவை வளரும்போது காயத்திற்குள் உள்ள உயிருள்ள திசுக்களை உட்கொள்ள ஆரம்பிக்கின்றன.
தென் அமெரிக்கா மற்றும் கரீபியனில் பொதுவாகக் காணப்படும் இந்த ஒட்டுண்ணி, தற்போது மெக்சிகோ உட்பட ஒவ்வொரு மத்திய அமெரிக்க நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சரியான மருத்துவ கண்காணிப்பு
வெளிப்படையான காயங்களைக் கொண்ட நபர்கள், கால்நடைகளுடன் கிராமப்புறங்களில் பயணம் செய்பவர்கள் அல்லது அவற்றுக்கு அருகில் வசிப்பவர்கள், தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்த் தொற்று உயிருக்கு ஆபத்தானது என்றாலும் சரியான மருத்துவ கண்காணிப்பின் மூலம் இதனை குணப்படுத்தலாம்.
இந்த நோய் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண்பதற்காக அமெரிக்க வேளாண்மைத் துறை, ஏனைய விவசாய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



